வாகனம் மோதி முன்னாள் கிராம உதவியாளர் பலி

x
தினத்தந்தி 23 July 2021 11:16 PM IST (Updated: 23 July 2021 11:16 PM IST)
வாகனம் மோதி முன்னாள் கிராம உதவியாளர் பலி
விராலிமலை, ஜூலை.24-
விராலிமலை தாலுகா பேராம்பூர் கல்லுப்பட்டியைச் சேர்ந்தவர் திருமலை (வயது 62). ஓய்வு பெற்ற கிராம உதவியாளரான இவர் நேற்று சொந்த வேலை காரணமாக விராலிமலைக்கு மோட்டார் சைக்கிளில் வந்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு செல்வதற்காக விராலிமலை-கீரனூர் சாலை குளத்தாத்துப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் திருமலை ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விராலிமலை தாலுகா பேராம்பூர் கல்லுப்பட்டியைச் சேர்ந்தவர் திருமலை (வயது 62). ஓய்வு பெற்ற கிராம உதவியாளரான இவர் நேற்று சொந்த வேலை காரணமாக விராலிமலைக்கு மோட்டார் சைக்கிளில் வந்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு செல்வதற்காக விராலிமலை-கீரனூர் சாலை குளத்தாத்துப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் திருமலை ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





