

திருவெண்ணெய்நல்லூர்,
.
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள காந்தலவாடி கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன். இவருடைய மகன் அய்யனார் (வயது 15). இவன் உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் நேற்று காலையில் அய்யனார் தனது வீட்டில் இருந்த சுவிச்சை போட்டுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கியதில் அய்யனார் தூக்கி வீசப்பட்டான். இதில் பலத்த காயமடைந்த அவனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக இருவேல்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அய்யனாரை பரிசோதித்த டாக்டர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.