தனிநபருக்கு ரூ.15 லட்சம் வரை கடனுதவி

பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் சார்பில் தனிநபருக்கு ரூ.15 லட்சம் வரை கடனுதவி அளிக்கப்படுகிறது.
சிவகங்கை,
பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் சார்பில் தனிநபருக்கு ரூ.15 லட்சம் வரை கடனுதவி அளிக்கப்படுகிறது.
ரூ.15 லட்சம்
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் மூலம் பொது கால கடன் திட்டம் மற்றும் தனிநபர் கடன் திட்டம் மூலம் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதம் வரை வசூலிக்கப்படுகிறது.
இது போல் பெண்களுக்கான புதிய பொற்காலத் திட்டத்தின் கீழ் ஆண்டு வட்டி விகிதம் 5 சதவீதத்தில் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. சிறுகடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழு மகளிர் உறுப்பினர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரையும் குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரையும் கடன் வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 4 சதவீதமாகும்.
சுயஉதவிக்குழு
இந்த திட்டங்களில் கடன் உதவி பெற விண்ணப்பிப்பவர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவராக இருத்தல் வேண்டும்.ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பம்
இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் அனைத்து கூட்டுறவு வங்கி கிளைகளிலும் பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story