கிராம மக்களிடம் போலீசார் விழிப்புணர்வு

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து கிராம மக்களிடம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
கிராம மக்களிடம் போலீசார் விழிப்புணர்வு
Published on

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி உத்தரவின்படி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன் மற்றும் அவரது குழுவினரான போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலெட்சுமி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மருதமுத்து ஆகியோர்கள் இணைந்து களரம்பட்டி கிராம மக்களிடையே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். அப்போது போலீசார் ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் செயல்படும் பெண்கள் உதவி மையம் இலவச தொலைப்பேசி எண் 181 குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர். மேலும் குழந்தை தொழிலாளர் முறையை குறித்தும், உங்கள் பகுதியில் குழந்தை தொழிலாளர் முறை இருந்தால் அதனை ஒழிக்க ஒத்துழைப்பு வழங்குமாறும் கூறினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com