

அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் நேற்று ஒருவர் மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 75 வயதுடைய முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது 7 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்னும் 330 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது. நேற்று மாவட்டத்தில் 2,034 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.