திருவள்ளூரில் கலெக்டர் அலுவலக நலத்திட்ட உதவி


திருவள்ளூரில் கலெக்டர் அலுவலக நலத்திட்ட உதவி
x
தினத்தந்தி 4 Aug 2021 4:24 AM GMT (Updated: 4 Aug 2021 4:24 AM GMT)

திருவள்ளூரில் கலெக்டர் அலுவலக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

திருவள்ளூர், 

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2 பேருக்கு ரூ.11 ஆயிரத்து 830 மதிப்பில் 3 சக்கர சைக்கிள் மற்றும் மோட்டார் பொருத்திய தையல் எந்திரம் போன்றவை வழங்கப்பட்டது. மேலும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வெவ்வேறு விபத்துகளில் உயிரிழந்தவர்களின் 4 பேரின் குடும்பத்தினருக்கு ரூ.5½ லட்சத்துக்கான காசோலையையும் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.

அவருடன் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வித்யா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Next Story