மூதாட்டி தற்கொலை


மூதாட்டி தற்கொலை
x
தினத்தந்தி 5 Aug 2021 10:13 PM GMT (Updated: 5 Aug 2021 10:13 PM GMT)

சிவகாசி அருகே மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

சிவகாசி, 
சிவகாசி பள்ளப்பட்டி ரோடு திருவள்ளுவர் காலனியை சேர்ந்தவர் கருப்ைபயா (வயது 68). இவரது மனைவி பிச்சையம்மாள் (64). இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் பிச்சையம்மாளுக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டது. இதற்கான அவர் பல இடங்களில் மருத்துவம் பார்த்து வந்தார். நோய் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த  பிச்சையம்மாள் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story