ரெயில் மோதி டிராக்டர் டிரைவர் பலி


ரெயில் மோதி டிராக்டர் டிரைவர் பலி
x
தினத்தந்தி 7 Aug 2021 12:48 AM IST (Updated: 7 Aug 2021 12:48 AM IST)
t-max-icont-min-icon

ரெயில் மோதி டிராக்டர் டிரைவர் பலியானார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,ஆக.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள இனாம்கரிசல்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மாரிக்கனி (வயது 31). டிராக்டர் டிரைவர். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இவர் தனது கிராமத்திற்கு அருகே உள்ள தண்டவாள பகுதிக்கு இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்றார். அப்போது செங்கோட்டையில் இருந்து சென்னை சென்ற எக்ஸ்பிரஸ் ெரயில் மோதியதில் பரிதாபமாக பலியானார்.
இது குறித்து தகவல் அறிந்த ெரயில்வே போலீசார் மாரிக்கனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
1 More update

Next Story