உளுந்தூர்பேட்டை அருகே சாலை விபத்தில் வாலிபர் பலி

உளுந்தூர்பேட்டை அருகே நடந்த சாலை விபத்தில் வாலிபர் பலியானார்.
உளுந்தூர்பேட்டை அருகே சாலை விபத்தில் வாலிபர் பலி
Published on

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் மகன் அருணாச்சலம் (வயது 22). இவர் சம்பவத்தன்று பிள்ளையார்குப்பத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு புறப்பட்டார். நன்னாவரம் கிராமம் அருகே சாலையில் உலர வைக்கப்பட்டிருந்த எள் பயிரை கடக்க முயன்றபோது, நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அருணாச்சலம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com