கொரோனாவுக்கு 2 பெண்கள் பலி

கொரோனாவுக்கு 2 பெண்கள் உயிரிழந்தனர்.
கொரோனாவுக்கு 2 பெண்கள் பலி
Published on

திருச்சி,

திருச்சி மாவட்டத்தில் நேற்று 66 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியானது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 72,862 ஆக அதிகரித்துள்ளது. தொடர் சிகிச்சையில் 735 பேர் உள்ளனர். 62 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 71,187 ஆகும். கொரோனாவுக்கு நேற்று திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 30 வயது பெண் மற்றும் 60 வயது மூதாட்டி உயிரிழந்தனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 970 ஆக உயர்ந்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com