கொரோனாவுக்கு உயிரிழப்பு இல்லை


கொரோனாவுக்கு உயிரிழப்பு இல்லை
x
தினத்தந்தி 7 Aug 2021 8:43 PM GMT (Updated: 7 Aug 2021 8:43 PM GMT)

அரியலூர் மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை.

அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் 25 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் 6 பேரும் நேற்று புதிதாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 8 பேரும், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 20 பேரும் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். நேற்று பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் யாரும் கொரோனாவுக்கு உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 101 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 256 பேரும் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 1,143 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 910 பேருக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

Next Story