முக்கூடல் நாராயணசாமி கோவிலில் ஆடி திருவிழா கொடியேற்றம்

x
தினத்தந்தி 8 Aug 2021 2:51 AM IST (Updated: 8 Aug 2021 2:51 AM IST)
முக்கூடல் நாராயணசாமி கோவிலில் ஆடி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முக்கூடல்:
முக்கூடல் நாராயணசாமி கோவிலில் ஆடி திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா வருகிற 15-ந் தேதி வரை நடக்கிறது. விழாவின் போது மாலையில் தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தவாரியும், இரவு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் நாராயணர் பவனியும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து நாடார் விஷ்ணு சபையர் செய்துள்ளனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





