பராமரிப்பு பணி: மின்சார ரெயில் சேவையில் மாற்றம் சென்னை ரெயில்வே கோட்டம் அறிவிப்பு


பராமரிப்பு பணி: மின்சார ரெயில் சேவையில் மாற்றம் சென்னை ரெயில்வே கோட்டம் அறிவிப்பு
x
தினத்தந்தி 8 Aug 2021 6:11 AM GMT (Updated: 8 Aug 2021 6:11 AM GMT)

சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது.

சென்னை, 

பராமரிப்பு பணி காரணமாக நாளை( 9-ந்தேதி) கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

* செங்கல்பட்டு-கடற்கரை இடையே காலை 9.40 மணி, 11 மணி, 11.30 மணி, மதியம் 12.20 மணி, 1 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் மற்றும் செங்கல்பட்டு-கும்மிடிப்பூண்டி இடையே காலை 10.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் ஆகியவை செங்கல்பட்டு-தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

* கடற்கரை-செங்கல்பட்டு இடையே காலை 9.02 மணி, 9.32 மணி, 10.10 மணி, 10.56 மணி, 11.50 மணி, மதியம் 12.15 மணி, கும்மிடிப்பூண்டி-செங்கல்பட்டு இடையே காலை 7.48 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு தாம்பரம் ரெயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும்.

* காஞ்சீபுரம்-கடற்கரை இடையே காலை 9.15 மணிக்கும், செங்கல்பட்டு-கடற்கரை இடையே மதியம் 1.50 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

* காஞ்சீபுரம்-கடற்கரை இடையே காலை ரத்து செய்யப்பட்ட ரெயிலுக்கு பதிலாக, மதியம் 12 மணிக்கு காஞ்சீபுரம்-கடற்கரை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும்.

* திருமால்பூர்-கடற்கரை இடையே காலை 10.40 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், திருமால்பூரில் இருந்து 12 மணிக்கு புறப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story