பொன்னமராவதி பஸ் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்ட 6 பேர் கைது

x
தினத்தந்தி 23 Feb 2022 11:38 PM IST (Updated: 23 Feb 2022 11:38 PM IST)
மறியலில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
பொன்னமராவதி:
புதுக்கோட்டை வீரமுத்தரையர் முன்னேற்ற சங்க மேற்கு மாவட்ட அமைப்பாளர் கார்த்தி தலைமையில், பொன்னமராவதி தெற்கு ஒன்றிய அமைப்பாளர் ஜெயபால், சேகர் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் பொன்னமராவதி பஸ் நிலையம் முன்பு பஸ் மறியலில் ஈடுபட்டனர். மறியலில் வீரமுத்தரையர் முன்னேற்ற சங்க நிறுவன தலைவர் கே.கே.செல்வக்குமாரை வீட்டுக்காவலில் வைத்த தமிழக காவல்துறையை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதையடுத்து பொன்னமராவதி போலீஸ் இன்ஸ்பெக்டர் தனபாலன் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்தனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





