கோவிலில் தேய் பிறை அஷ்டமி பூஜை


கோவிலில்  தேய் பிறை அஷ்டமி பூஜை
x
தினத்தந்தி 24 Feb 2022 5:13 PM IST (Updated: 24 Feb 2022 5:13 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி கோவிலில் தேய் பிறை அஷ்டமி பூஜை நடந்தது

கோவில்பட்டி:
கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மன் புற்றுக் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை நடைபெற்றது.
இதனையொட்டி காலையில் கோவில்நடை திறக்கப்பட்டது. பின்னர் சங்கல்பம், கணபதி பூஜையுடன் தொடங்கி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து காலபைரவருக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டாரப் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தயிர்சாதம் மற்றும் உளுந்து வடை பிரசாதமாக வழங்கப்பட்டது.
1 More update

Next Story