தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை


தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 25 Feb 2022 11:04 PM IST (Updated: 25 Feb 2022 11:04 PM IST)
t-max-icont-min-icon

வடமதுரை அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

வடமதுரை: 

வடமதுரை அருகே உள்ள வடக்கு மோளப்பாடியூரை சேர்ந்தவர் முருகன் (வயது 28). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள ராஜ்குமார் என்பவரது வீட்டிற்கு வேலைக்கு சென்றார். வேலை முடிந்து மாலை மீண்டும் வீட்டிற்கு சென்று விட்டார். 

இந்நிலையில் முருகனின் வீட்டிற்கு ராஜ்குமார் சென்று தன் வீட்டில் இருந்த பணத்தை அவர் எடுத்து சென்றதாக கூறியுள்ளார். அதற்கு முருகன் மறுக்கவே, ராஜ்குமார் முருகனின் மோட்டார் சைக்கிளை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த முருகன் வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து வடமதுரை போலீசில் முருகனின் மனைவி புவனேஸ்வரி புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 
1 More update

Next Story