வாலாஜாவில் தனியார் பள்ளி உதவியாளர் தூக்குப்போட்டு தற்கொலை

x
தினத்தந்தி 27 Feb 2022 11:42 PM IST (Updated: 27 Feb 2022 11:42 PM IST)
வாலாஜாவில் தனியார் பள்ளி உதவியாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வாலாஜா
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் உள்ள ஜங்கமசெட்டி தெருவை சேர்ந்தவர் சக்கரவர்த்தி (வயது 64). இவர் ராணிப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.
கடந்த சில மாதமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு, அதற்காக சிகிச்சை பெற்றும் பலன் அளிக்கவில்லை. இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத போது, மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





