முருகன் கோவில்களில் கிருத்திகை வழிபாடு

சங்கராபுரம் பகுதி முருகன் கோவில்களில் கிருத்திகை வழிபாடு நடைபெற்றது.
சங்கராபுரம்,
சங்கராபுரம் அருகே தேவபாண்டலம் குந்தவேல் முருகன் கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி குந்தவேல் முருகனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்பட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் சங்கராபுரம் அருகே உள்ள குளத்தூர் சரவணபுரம் ஆறுமுகபெருமான் கோவில், சங்கராபுரம் பூட்டை முருகன் கோவில், ராவத்தநல்லூர் சக்திமலை முருகன் கோவில் உள்பட பல்வேறு முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
Related Tags :
Next Story






