மதுக்கூட ஊழியரிடம் பணம் பறிப்பு

விருதுநகர் அருகே மதுக்கூட ஊழியரிடம் பணம் பறிக்கப்பட்டது.
மதுக்கூட ஊழியரிடம் பணம் பறிப்பு
Published on

விருதுநகர்,

விருதுநகர் அருகே உள்ள சத்திரரெட்டியபட்டியை சேர்ந்தவர் மாரிச்செல்வம் (வயது 43). இவர் இந்நகரில் உள்ள டாஸ்மாக் மதுக்கூடத்தில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த அசோக், வீரபாண்டி ஆகிய 2 பேரும் மது குடித்து விட்டு பணம் தர மறுத்ததோடு மாரிச்செல்வதுடன் தகராறு செய்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்து ரூ.700-ஐ பறித்து சென்றனர். இதுபற்றி மாரிச்செல்வம் கொடுத்த புகாரின் பேரில் பாண்டியன்நகர் போலீசார், அசோக் மற்றும் வீரபாண்டி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com