

நெல்லை:
நெல்லை மாநகர பகுதியில் நேற்று முன்தினமும், நேற்றும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. நேற்று மாலை 4 மணியளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதைத்தொடர்ந்து பாளையங்கோட்டை, வண்ணார்பேட்டை, புதிய பஸ் நிலையம், நெல்லை சந்திப்பு பகுதியில் பரவலாக மழை பெய்தது. இந்த மழை சுமார் மணி நேரம் பெய்தது. இதேபோல் நெல்லை மாவட்டத்தில் நேற்று கோபாலசமுத்திரம், பிராஞ்சேரி, மானூர், தென்கலம், நாஞ்சான்குளம் பகுதிகளிலும் மணி நேரம் மழை பெய்தது.