

ராயக்கோட்டை:
கெலமங்கலத்தில் பட்டாளம்மன் கோவில் தேர்த்திருவிழா நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. இதில் கெலமங்கலம், செட்டிபள்ளி, குந்துமாரனப்பள்ளி, |ஜக்கேரி உள்ளிட்ட 11 கிராம மக்கள் ஆடு, கோழி பலியிட்டும், மாவிளக்கு எடுத்தும் வழிபட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் நடந்தது. பேரூராட்சி தலைவர் தேவராஜ் தலைமையில் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. கலந்துக்கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து தொடங்கிவைத்தார். இதில் அறநிலையத்துறை அதிகாரிகள், பேரூராட்சி கவுன்சிலர்கள், ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகளின் வழியாக பவனி வந்தது. தேரோட்டத்தையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சார வினியோகம் நிறுத்தப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு கிருத்திகா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ், சுப்பிரமணி ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவையெட்டி பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டது.