கோர்ட்டில் ஆஜராகாமல் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது

x
தினத்தந்தி 7 April 2022 2:18 AM IST (Updated: 7 April 2022 2:18 AM IST)
பாளையங்கோட்டையில் கோர்ட்டில் ஆஜராகாமல் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை:
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் மரக்கடை பெரிய மள்ளர் தெருவைச் சேர்ந்தவர் ஸ்டான்லி சற்குணம் தங்கையா (வயது 38). இவர் ஒரு திருட்டு வழக்கில் பாளையங்கோட்டை பெருமாள்புரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
அதன்பின்னர் கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து அவர் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதனால் அவருக்கு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. இதையடுத்து போலீசார் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் ஸ்டான்லி சற்குணம் தங்கையாவை போலீசார் நேற்று கைது செய்தனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





