கோர்ட்டில் ஆஜராகாமல் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது

பாளையங்கோட்டையில் கோர்ட்டில் ஆஜராகாமல் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.
கோர்ட்டில் ஆஜராகாமல் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது
Published on

நெல்லை:

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் மரக்கடை பெரிய மள்ளர் தெருவைச் சேர்ந்தவர் ஸ்டான்லி சற்குணம் தங்கையா (வயது 38). இவர் ஒரு திருட்டு வழக்கில் பாளையங்கோட்டை பெருமாள்புரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

அதன்பின்னர் கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து அவர் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதனால் அவருக்கு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. இதையடுத்து போலீசார் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் ஸ்டான்லி சற்குணம் தங்கையாவை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com