முப்பிடாரி அம்மன் கோவில் பங்குனி தேரோட்டம்

x
தினத்தந்தி 7 April 2022 4:12 AM IST (Updated: 7 April 2022 4:12 AM IST)
சுரண்டை முப்பிடாரி அம்மன் கோவில் பங்குனி தேரோட்டம் நடந்தது.
சுரண்டை:
சுரண்டை சிவகுருநாதபுரம் முப்பிடாரி அம்மன் கோவில் பங்குனி திருவிழா கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சிறப்பு பூஜைகள், 1,008 திருவிளக்கு பூஜை, வில்லிசை, ஆன்மிக சொற்பொழிவு, பட்டிமன்றம், மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தது. 7-ம் நாள் இரவில் அம்மன் சப்பர பவனி நடைபெற்றது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. மாலை 4 மணிக்கு தேரில் முப்பிடாரி அம்மன் எழுந்தருளினார். தேர் 4 ரதவீதிகளில் சென்று நிலையை அடைந்தது. விழா ஏற்பாடுகளை இந்து நாடார் மகமை கமிட்டி டிரஸ்ட் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





