மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 April 2022 10:13 PM IST (Updated: 7 April 2022 10:13 PM IST)
t-max-icont-min-icon

கல்வராயன்மலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கச்சிராயப்பாளையம், 

பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், இந்த விலை உயர்வை திரும்ப பெறக்கோரியும் கச்சிராயப்பாளையம் அடுத்த கல்வராயன்மலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் அண்ணாமலை தலைமை தாங்கினார். 

ஆர்ப்பாட்டத்தின் போது, கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து பாடை கட்டி தூக்கி செல்வது போன்றும், பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை திரும்ப பெறக்கோரியும் கண்டன கோஷம் எழுப்பப்பட்டது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏழுமலை, ஒன்றிய தலைவர் தங்கராஜ், கட்சி நிர்வாகிகள் சடையன், ஜெயகுரு, கணேசன், தீர்த்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
1 More update

Next Story