அரூர் அருகே சொட்டுநீர் பாசன குழாய்களை திருடிய 4 பேர் கைது

x
தினத்தந்தி 8 April 2022 12:09 AM IST (Updated: 8 April 2022 12:09 AM IST)
அரூர் அருகே சொட்டுநீர் பாசன குழாய்களை திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரூர்:
அரூர் அருகே உள்ள மோப்பிரிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். சொட்டுநீர் பாசன கருவிகளை விற்பனை செய்து வந்தார். இவருடைய வீட்டின் அருகே சொட்டுநீர் பாசன குழாய்களை போட்டு வைத்திருந்தார். அதை அரூரை சேர்ந்த கார்த்தி (வயது 21) மற்றும் 3 சிறுவர்கள் சேர்ந்து திருடி சென்று அருகே உள்ள புதரில் மறைத்து வைத்திருந்தனர். இதன் மதிப்பு ரூ.28 ஆயிரம் ஆகும். இது தொடர்பாக சரவணன் கொடுத்த புகாரின் பேரில் அரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து கார்த்தி மற்றும் 3 சிறுவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





