விஷம் குடித்து விவசாயி தற்கொலை

திருக்காட்டுப்பள்ளி அருகே மகள் திருமணத்துக்கு பணம் கிடைக்காததால் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
திருக்காட்டுப்பள்ளி;
திருக்காட்டுப்பள்ளி அருகே மகள் திருமணத்துக்கு பணம் கிடைக்காததால் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
விஷம் குடித்தார்
திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள விஷ்ணம்பேட்டை நடுத்தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது46) விவசாயி. இவர் தனது மகள் திருமணத்துக்கு பலரிடம் பணம் கடனாக கேட்டார். ஆனால் பணம் கிடைக்காததால் மன உளைச்சலுக்குள்ளான கோவிந்தராஜ் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை(விஷம்) குடித்தார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருக்காட்டுப்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட கோவிந்தராஜுக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பரிதாப சாவு
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கோவிந்தராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி போலீஸ் நிலையத்தில் கோவிந்தராஜின் மனைவி லதா புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story






