பள்ளி மாணவனை தாக்கிய வாலிபர் கைது

x
தினத்தந்தி 9 April 2022 9:28 PM IST (Updated: 9 April 2022 9:28 PM IST)
சங்கராபுரம் அருகே பள்ளி மாணவனை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சங்கராபுரம்,
சங்கராபுரம் அருகே உள்ள மல்லபுரம் கிராமத்தைச் சேர்ந்த 18 வயதுடைய மாணவன் அப்பகுதியில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். பள்ளி முடிந்து மாலை பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே ஊரைச் சேர்ந்த பிரசாந்த் (வயது 25) என்பவர், மாணவரிடம், எந்த ஊரு என கேட்டு தகராறு செய்து அவரை தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரசாந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





