சாராயம் விற்ற தேங்காய் வியாபாரி கைது

x
தினத்தந்தி 10 April 2022 1:45 AM IST (Updated: 10 April 2022 1:45 AM IST)
சாராயம் விற்ற தேங்காய் வியாபாரி கைது செய்யப்பட்டார்.
வாழப்பாடி துக்கியாம்பாளையம் குறிஞ்சி நகர் பகுதியில் ஒரு வீட்டில் சாராயம் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த தேங்காய் வியாபாரி மலையன் என்கிற ராஜா (வயது 48) என்பவருடைய வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு 110 லிட்டர் பாக்கெட் சாராயம் விற்பதற்காக வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். தொடர்ந்து சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார், ராஜாவை கைது செய்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





