மருத்துவ கல்லூரியில் திடீர் தீ விபத்து - 12 குழந்தைகள் பத்திரமாக மீட்பு


மருத்துவ கல்லூரியில் திடீர் தீ விபத்து - 12 குழந்தைகள் பத்திரமாக மீட்பு
x

ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூர் மருத்துவக் கல்லூரியில் உள்ள பிறந்த குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

துங்கர்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூர் மருத்துவக் கல்லூரியில் உள்ள பிறந்த குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தவலளிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், மூன்று தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை போராடி அணைத்தனர். மேலும் வார்டில் இருந்த 12 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.


Next Story