ரூ.16¼ லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்

ரூ.16¼ லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு: பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த பார்சல்களை சுங்கத்துறை அதிகாாிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது ஒரு பார்சலில் வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சிகரெட் பாக்கெட்டுகள் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, ரூ.16¼ லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக தேவனஹள்ளி விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





