சிபிஐ-யில் 1,673 பணியிடங்கள் காலியாக உள்ளன - ஜிதேந்திர சிங்


சிபிஐ-யில் 1,673 பணியிடங்கள் காலியாக உள்ளன - ஜிதேந்திர சிங்
x

நாட்டின் முதன்மை புலனாய்வு அமைப்பான சிபிஐ-யில் உள்ள 7,295 பணியிடங்களில், 1,673 பணியிடங்கள் காலியாக உள்ளன.

புதுடெல்லி,

மக்களவையில் மத்திய இணை மந்திரி ஜிதேந்திர சிங் கூறியதாவது:-

நாட்டின் முதன்மை புலனாய்வு அமைப்பான சிபிஐ-யில் உள்ள 7,295 பணியிடங்களில், 1,673 பணியிடங்கள் காலியாக உள்ளன.குற்றங்களை விசாரிக்க பொதுத்துறை வங்கிகள்,உள்துறை அமைச்சகம் உள்ளிட்ட பல துறைகளில் இருந்து தகுந்த நபர்களை பரிந்துரைக்க சிபிஐ கேட்டுக்கொண்டுள்ளது.

2019 முதல் 2022 நவம்பர் வரை மத்தியஅரசு மற்றும் அரசியல்சான அமைப்புகள் மீது அவதூறு கருத்து பதிவிட்டதாக 15 வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளது. 28 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.


Next Story