இயற்கை உபாதையை கழிக்க சென்ற இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - அதிர்ச்சி சம்பவம்


இயற்கை உபாதையை கழிக்க சென்ற இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - அதிர்ச்சி சம்பவம்
x

இயற்கை உபாதையை கழிக்க சென்ற இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பாலியா மாவட்டம் நக்ரா பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண் கடந்த 30-ம் தேதி இயற்கை உபாதையை கழிக்க கிராமத்திற்குள் அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார்.

அப்போது, அந்த பெண்ணை அதே கிராமத்தை சேர்ந்த 4 பேர் கொண்ட கும்பல் பின் தொடர்ந்து சென்றுள்ளனர். பின்னர், காட்டுப்பகுதியில் வைத்து அந்த பெண்ணை 4 பேரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தலைமறைவாக உள்ள 4 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்களின் வயது 25 முதல் 35 என போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story