கஞ்சா விற்ற 2 பேர் கைது

கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மங்களூரு-
தட்சிண கன்னடா மாவட்டம் கங்கனாடி ரெயில் நிலையம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவாக குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு நின்று கொண்டு கஞ்சா விற்ற 2 பேரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் பண்ட்வாலை சேர்ந்த அப்துல் சாதிக் (வயது 35), பெல்தங்கடியை சேர்ந்த நவாஸ் (24) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 13 கிலோ கஞ்சா, ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணம், 2 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





