பிரவீன் நெட்டார் கொலையில் மேலும் 2 பேர் கைது


பிரவீன் நெட்டார் கொலையில் மேலும் 2 பேர் கைது
x

பிரவீன் நெட்டார் கொலையில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு ரிஷிகேஷ் தகவல் அளித்துள்ளார்.

மங்களூரு;


தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா பெல்லாரே அருகே நெட்டார் கிராமத்தை சேர்ந்த பா.ஜனதா பிரமுகர் பிரவீன் நெட்டார் கடந்த மாதம் 26-ந்தேதி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த கொலை வழக்கில் ஏற்கனவே ஜாகீர், ஷபீக் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் ஜாகீர், ஷபீக் ஆகியோர் கொடுத்த தகவலின்பேரில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விசாரணையில் அவர்கள், பெல்லாரே பள்ளி மஜலு பகுதியை சேர்ந்த சதாம், ஹரீஸ் என்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த தகவலை தட்சிண கன்னடா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரிஷிகேஷ் பகவான் தெரிவித்தார்.


Next Story