தேசிய செய்திகள்

தொழில் துறைக்கு ஆக்ஸிஜன் விநியோகிக்கத் தடை: மத்திய அரசு நடவடிக்கை + "||" + Oxygen For Industrial Use To Be Diverted For Covid Patients Amid Spike

தொழில் துறைக்கு ஆக்ஸிஜன் விநியோகிக்கத் தடை: மத்திய அரசு நடவடிக்கை

தொழில் துறைக்கு ஆக்ஸிஜன் விநியோகிக்கத் தடை:  மத்திய அரசு நடவடிக்கை
கொரோனா தீவிர பாதிப்புக்கு ஆளாவோருக்கு ஆக்சிஜன் செலுத்துவது சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கிறது
புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காட்டுத்தீ போல பரவி வருகிறது. தீவிர பாதிப்புக்கு ஆளாவோருக்கு ஆக்சிஜன் செலுத்துவது சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் மருத்துவ ஆக்சிஜன் தேவை பெருகி வருகிறது.

ஆக்சிஜன் பற்றாக்குறையை தவிர்க்க, அதைப் பயன்படுத்துவதில் கவனமாக இருப்பதுடன், அதன் உற்பத்தியை பெருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி சமீபத்தில் அழைப்பு விடுத்தார். இருப்பினும் இதற்கு மத்தியில் மராட்டிய மாநிலம், நாலசோப்ராவில் 2 தனியார் ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 10 கொரோனா நோயாளிகள் கடந்த சில தினங்களுக்கு முன் பலியாகினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையின்போது தேவைப்படும் ஆக்சிஜனுக்கு பல மாநிலங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தொழில்துறை பயன்பாட்டுக்காக ஆக்சிஜனை விநியோகிக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. அந்தப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் ஆக்சிஜனை மருத்துவமனைகளில் உபயோகிக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.



தொடர்புடைய செய்திகள்

1. போலி ரெம்டெசிவிர் ஊசி போட்டும் கொரோனா நோயாளிகள் உயிர் தப்பிய அதிசயம்
போலி ரெம்டெசிவிர் ஊசி போட்டும் 90 சதவீத கொரோனா நோயாளிகள் உயிர் தப்பிய அதிசயம் நிகழ்ந்துள்ளது.
2. கோவா அரசு மருத்துவமனையில் கடந்த 4 நாட்களில் 74 கொரோனா நோயாளிகள் மரணம்
கோவா அரசு மருத்துவமனையில் இன்று காலை மட்டும் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
3. திரிபுராவில் 31 கொரோனா நோயாளிகள் தப்பி ஓட்டம்
திரிபுரா மாநிலத்தில் சதர் உதவி மண்டலத்திற்கு உட்பட்ட அருந்ததி நகரில் ஊராட்சி சார்பில் தற்காலிக கொரோனா சிகிச்சை மையம் ஒன்று அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
4. ஆக்ஸிஜன் தயாரித்து இலவசமாக வழங்க அனுமதிக்க வேண்டும் - ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல்
ஆக்ஸிஜன் தயாரித்து இலவசமாக வழங்க அனுமதிக்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளது.
5. கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு; அரசு ஆஸ்பத்திரிகளுக்கு கூடுதல் வசதிகள் செய்து தர வேண்டும்; பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு
கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அரசு ஆஸ்பத்திரிகளுக்கு கூடுதல் வசதிகள் செய்து தர அனைத்து மாவட்டங்களில் உள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.