கேரளாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பில் புதிய உச்சம்


கேரளாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பில் புதிய உச்சம்
x
தினத்தந்தி 21 April 2021 6:05 PM GMT (Updated: 21 April 2021 6:05 PM GMT)

கேரளாவில் இதுவரை இல்லாத அளவாக இன்று கொரோனா பாதிப்பு புதிய உச்சம் தொட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் இதுவரை இல்லாத அளவாக இன்று கொரோனா பாதிப்பு புதிய உச்சம் தொட்டுள்ளது. கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,414- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  கொரோனா தொற்றில் இருந்து இன்று 5,431- பேர் குணம் அடைந்துள்ளனர்.  

இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 12 லட்சத்து 95 ஆயிரத்து 059- ஆக உள்ளது. கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 11 லட்சத்து 54 ஆயிரத்து 102-ஆக உள்ளது. 

கொரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரத்து 631 ஆக இருக்கிறது. கொரோனா பாதிப்பு காரணமாக இன்று 22 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5 ஆயிரமாக உள்ளது. 


Next Story