தேசிய செய்திகள்

டெல்லி மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் டேங்கர்கள் விரைந்தன + "||" + Delhi | An Oxygen carrying vehicle has reached Max Hospital, Saket after the hospital sent an SOS to the government

டெல்லி மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் டேங்கர்கள் விரைந்தன

டெல்லி மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் டேங்கர்கள் விரைந்தன
ஆக்சிஜன் 2 மணி நேரத்துக்கு மட்டுமே இருப்பதால் 60 நோயாளிகள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதாக டெல்லி கங்காராம் மருத்துவமனை தெரிவித்து இருந்தது.
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை மிகக்கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3.30 லட்சத்திற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

உலக அளவில் ஒருநாளில் ஏற்பட்ட உச்ச பாதிப்புகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் நாடு முழுவதும் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. 

குறிப்பாக டெல்லியில் உள்ள கங்காராம், மேக்ஸ் ஆகிய மருத்துவமனைகள் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், சில மணி நேரங்களுக்கே ஆக்சிஜன் சப்ளை செய்ய முடியும் என கூறியிருந்தன. 

இந்த நிலையில், கங்காராம் மருத்துவமனை மற்றும் டெல்லி மேக்ஸ் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் டேங்கர்கள் லாரிகள் விரைந்துள்ளன. இதனால் மருத்துவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் புதிதாக 19,953 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 338 பேர் பலி
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19,953 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் ‘10 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம்’; பஞ்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் பேட்டி
டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் நாங்கள் 10 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம் என்று பஞ்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் தெரிவித்தார்.
3. மும்பைக்கு வரவேண்டிய ஆக்சிஜன் தானே, நவிமும்பைக்கு திருப்பிவிடப்படுகிறது; மாநகராட்சி குற்றச்சாட்டு
மும்பைக்கு வரவேண்டிய ஆக்சிஜன் தானே, நவிமும்பைக்கு திருப்பிவிடப்படுவதாக மாநகராட்சி குற்றம்சாட்டி உள்ளது.
4. டெல்லியில் தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது
டெல்லியில் இன்று மேலும் 18,043 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. பஞ்சாப் கிங்சை வீழ்த்தி டெல்லி அணி 6-வது வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி டெல்லி அணி 6-வது வெற்றியை பெற்றதுடன் புள்ளி பட்டியலிலும் முதலிடத்தை பிடித்தது.