இந்தியாவில் கொரோனா ஒருநாள் பாதிப்பு 3.50 லட்சத்தை நெருங்கியது + "||" + India reports 3,49,691 new #COVID19 cases, 2,767 deaths and 2,17,113 discharges in the last 24 hours, as per Union Health Ministry
இந்தியாவில் கொரோனா ஒருநாள் பாதிப்பு 3.50 லட்சத்தை நெருங்கியது
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒருநாள் கொரோனா பாதிப்பு 3.50 லட்சத்தை நெருங்கியது.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை காட்டுத்தீ போல பரவி வருகிறது. கொரோனா வைரசால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தினம் தினம் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 3 லட்சத்து 49 ஆயிரத்து 691- பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் இதுவரை இல்லாத அளவாக இன்று 2,767-பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து நேற்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 17 ஆயிரத்து 113- ஆக உள்ளது.
நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 69 லட்சத்து 60 ஆயிரத்து 172- பேர் ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 40 லட்சத்து 85 ஆயிரத்து 110- ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 92 ஆயிரத்து 311- ஆக உயர்ந்துள்ளது. தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 26 லட்சத்து 82 ஆயிரமாக உள்ளது.
அந்தியூர், அம்மாபேட்டை பகுதியில் தொழில் அதிபர் உள்பட 5 பேர் கொரோனாவால் இறந்தார்கள். மேலும் பல்வேறு பகுதிகளில் 52 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.