கொரோனாவை ஒன்றாக எதிர்கொள்வது பற்றி ஜப்பான் பிரதமருடன் மோடி தொலைபேசியில் பேச்சு


கொரோனாவை ஒன்றாக எதிர்கொள்வது பற்றி ஜப்பான் பிரதமருடன் மோடி தொலைபேசியில் பேச்சு
x
தினத்தந்தி 26 April 2021 7:28 PM GMT (Updated: 26 April 2021 7:28 PM GMT)

பிரதமர் மோடி நேற்று ஜப்பான் பிரதமர் யோஷிகிடே சுகாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

தற்போது நடந்து வரும் இருநாட்டு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். மேலும், உயர் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு பற்றியும், கொரோனாவை ஒன்றாக எதிர்கொள்வது பற்றியும் இருவரும் விவாதித்தனர். இத்தகவலை பிரதமர் மோடி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Next Story