தேசிய செய்திகள்

கொரோனா சூழல் காரணமாக சுப்ரீம் கோர்ட்டுக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாகவே கோடை விடுமுறை + "||" + Summer vacation a week before the Supreme Court due to the Corona environment

கொரோனா சூழல் காரணமாக சுப்ரீம் கோர்ட்டுக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாகவே கோடை விடுமுறை

கொரோனா சூழல் காரணமாக சுப்ரீம் கோர்ட்டுக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாகவே கோடை விடுமுறை
அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறித்து சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா நேற்று தனது முதல் பணி நாளில் அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினர்.

அதில் பார் கவுன்சில் ஆப் இந்தியா, சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்கள் சங்கம், வழக்குத் தாக்கல் செய்யும் வக்கீல்கள் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்கள் சங்கத் தலைவரும், மூத்த வக்கீலுமான விகாஸ் சிங் கூறுகையில், சுப்ரீம் கோர்ட்டுக்கு கோடை விடுமுறையை மே 14-ந் தேதிக்குப் பதிலாக ஒரு வாரத்துக்கு முன்னதாக மே 8-ந் தேதி தொடங்கவும், ஜூன் 26-ந் தேதி வரை விடுமுறை அளிக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டு இணைப்புக் கட்டிடத்தில் 60 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையத்தை அமைக்க தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார் என்றார். இதே தகவலை, வழக்கு தாக்கல் செய்யும் வக்கீல்கள் சங்க செயலாளர் அரிஸ்டாட்டில் ஜோசப்பும் தெரிவித்துள்ளார்.

சுப்ரீம் கோர்ட்டு நாட்காட்டியின்படி, மே 14 தொடங்கி ஜூன் 30 வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவை ஒன்றாக எதிர்கொள்வது பற்றி ஜப்பான் பிரதமருடன் மோடி தொலைபேசியில் பேச்சு
பிரதமர் மோடி நேற்று ஜப்பான் பிரதமர் யோஷிகிடே சுகாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.
2. பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு 8 லட்சத்தை கடந்தது
இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-வது அலை கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், அண்டை நாடான பாகிஸ்தானில் கொரோனா வைரசின் 3-வது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
3. சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 12,666 பேருக்கு கொரோனா
சத்தீஸ்கர் மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,52,362 ஆக அதிகரித்துள்ளது
4. இலவச தடுப்பூசி திட்டம் எதிர்காலத்திலும் தொடரும்; கொரோனா தடுப்பூசி பற்றிய வதந்திகளை நம்பாதீர்கள்; பிரதமர் மோடி வேண்டுகோள்
கொரோனா தடுப்பூசி பற்றிய வதந்திகளை நம்பாதீர்கள் என்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் ேமாடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இலவசமாக தடுப்பூசி செலுத்தும் திட்டம் எதிர்காலத்திலும் தொடரும் என்றும் அவர் கூறினார்.
5. இந்தியாவில் 10 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக பதிவு
மராட்டியம், தமிழகம் உள்பட 10 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் பதிவாகி உள்ளது.