கொரோனா நோயாளிகளுக்கு நாள்தோறும் ரூ.5 ஆயிரம் - அரியானா முதல்வர் அறிவிப்பு


கொரோனா நோயாளிகளுக்கு நாள்தோறும் ரூ.5 ஆயிரம் - அரியானா முதல்வர் அறிவிப்பு
x
தினத்தந்தி 6 May 2021 8:11 AM GMT (Updated: 6 May 2021 8:11 AM GMT)

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக நாள்தோறும் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்று அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் அறிவித்துள்ளார்.

சண்டிகார்

இது தொடர்பாக அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார்  கூறியதாவது:-

 கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு உதவும் வகையில் நாள்தோறும் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். அதிகபட்சமாக 7 நாள்களுக்கு என ஒரு நபருக்கு ரூ.35 ஆயிரம் வழங்கப்படும்.அவர்களது மருத்துவ செலவுக்காக இந்தத் தொகை வழங்கப்படும்.

இதேபோன்று தனியார் மருத்துவமனைகளும் அவர்களுக்கு ரூ. 1,000 ஒதுக்க வேண்டும். ஒரு நாளைக்கு ரூ. 1000 வீதம் 7 நாள்களுக்கு ரூ. 7,000 வழங்க வேண்டும் என்று கூறினார்.


Next Story