தேசிய செய்திகள்

கொரோனா சூழலில் இந்திய மக்களுடன் மனதார துணை நிற்கிறேன் - போப் ஆண்டவர் + "||" + Pope’s closeness to India as it struggles against Covid-19

கொரோனா சூழலில் இந்திய மக்களுடன் மனதார துணை நிற்கிறேன் - போப் ஆண்டவர்

கொரோனா சூழலில் இந்திய மக்களுடன் மனதார துணை நிற்கிறேன் - போப் ஆண்டவர்
கொரோனா சூழலில் இந்திய மக்களுடன் மனதார துணை நிற்கிறேன் என போப் ஆண்டவர் பிரான்சிஸ் கூறி உள்ளார்.
புதுடெல்லி

கொரோனா இரண்டாவது அலையால் இந்தியா மிக மோசமான பாதிப்பை சந்தித்து வருகிறது. நாளுக்கு நாள் தொற்றின் வீரியம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 

கொரோனா நெருக்கடியில் அயராது உழைத்து வரும் இந்திய மருத்துவர்களுக்கு,  போப் ஆண்டவர் பிரான்சிஸ் புகழாரம் சூட்டியுள்ளார். இதுதொடர்பாக போப் பிரான்சிஸ் வெளியிட்டு உள்ள செய்தியில் கூறி இருப்பதாவது:-

இந்திய மக்களுடன் மனதார துணை நிற்கிறேன். நோயுற்றவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை காட்டிலும் நோயாளிகளை கவனித்துக்கொள்ளும் மருத்துவ ஊழியர்கள் தான் என் எண்ணத்தில் இருக்கின்றனர்.

குறிப்பாக, கொரோனாவால் உயிரிழந்தவர்களை பிரிந்து வாடும் மக்களுக்கு என் அனுதாபங்கள். மக்களின் உடனடி தேவைகளை சரி செய்வதற்காக ஏராளமான மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் அயராது உழைத்து வருகின்றனர். 

அவர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவிப்பதுடன் விடாமுயற்சி, பலம் மற்றும் அமைதியை கடவுள் கொடுக்க வேண்டுமென வேண்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவின் கொரோனா சோகம், உலகத்துக்கு எச்சரிக்கை மணி; யுனிசெப் அமைப்பு கருத்து
இந்தியாவில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள சோகம், உலகத்துக்கு எச்சரிக்கை மணியை எழுப்ப வேண்டும் என்று ஐ.நா.வின் துணை அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது.
2. வெளிநாடுகள் இந்தியாவுக்கு வழங்கும் உதவி குறித்து வெளிப்படை தன்மை தேவை; ராகுல் காந்தி வலியுறுத்தல்
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதை பார்த்து, உலக நாடுகள் வழங்கும் உதவிகள் குறித்து வெளிப்படை தன்மை அவசியம் என்று ராகுல் காந்தி, வலியுறுத்தினார்.
3. கொரோனா நோயாளிகளுக்கு நாள்தோறும் ரூ.5 ஆயிரம் - அரியானா முதல்வர் அறிவிப்பு
தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக நாள்தோறும் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்று அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் அறிவித்துள்ளார்.
4. அமெரிக்கர்கள் யாரும் இந்தியா செல்ல வேண்டாம் - அமெரிக்க அரசு கடும் எச்சரிக்கை
அமெரிக்கர்கள் யாரும் இந்தியா செல்ல வேண்டாம் என அமெரிக்க அரசு மீண்டும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
5. முன்னாள் மத்திய இணை அமைச்சரும், பா.ஜ.க மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா பாதிப்பு!
முன்னாள் மத்திய இணை அமைச்சரும், பா.ஜ.க மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.