குடும்பத்தினருக்கு தெரியாமல் சிறிய வீட்டில் 10 வருடங்களாக காதலியை மறைத்து வைத்து இருந்த காதலன்

கேரளாவில் குடும்பத்தினருக்கு தெரியாமல் சிறிய வீட்டில் 10 வருடங்களாக காதலியை மறைத்து வைத்து இருந்த காதலன் குறித்த கதை வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.
Image courtesy :www.thenewsminute.com
Image courtesy :www.thenewsminute.com
Published on

பாலக்காடு

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அயிலூர் கிராமத்தை சேர்ந்தவர் ரஹ்மான் ( வயது 34 ) இவர் வீட்டு அருகே இருந்த பெண் சாஜிதா( வயது 28) கடந்த 10 வருடங்களுக்கு முன் சாஜிதா மாயமாகி உள்ளார்.அப்போது அவருக்கு வயது 18. இது குறித்து சாஜிதா பெற்றோர் 2010 ஆம் ஆண்டில் நெம்மாரா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்போது ரஹ்மான் உள்பட அவரது குடும்ப உறுப்பினர்களிடம் போலீசார் சாஜிதா குறித்து விசாரணை நடத்தினர் அப்போது சாஜிதா குறித்து தெரியவில்லை என கூறி உள்ளனர்.

இந்த நிலையில் சாஜிதாவை ரஹ்மான் கடந்த 10 ஆண்டுகளாக தனது சிறிய வீட்டில் மறைத்து வைத்து இருந்தது வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.

10 ஆண்டுகளாக ஒரு அறையில் வைத்து பாதுகாத்து சாஜிதாவுக்கு உணவு வழங்கி உள்ளார்.சிறிய அறையில் ஒரு ஜன்னல் இருந்தது, தேவைப்படும்போது கம்பிகளை அகற்றி வெளியே வரலாம். சஜிதா கழிப்பறையைப் பயன்படுத்த இரவில் மட்டுமே வெளியே செல்வார்; அவர் கம்பிகளை அகற்றிவிட்டு ஜன்னலுக்கு வெளியே குதித்து வீட்டிற்கு வெளியே குளியலறைக்கு செல்வார். அவர் நோய்வாய்ப்பட்டால், ரஹ்மான் மருந்துகளை கொண்டு வருவார். அறைக்குள் சிறிய டிவி ஒன்றையும் வைத்து இருந்து உள்ளார்.

ரஹ்மான், ஒரு எலக்ட்ரீசன் தனது அறைக்கு ஒரு சிறப்பு பூட்டு அமைப்பை ஏற்பாடு செய்து இருந்தார். அவர் சில மின்சார கம்பிகளை கதவுக்கு வெளியே வைத்து, அவரது குடும்ப உறுப்பினர்களைத் தொடக்கூடாது என்று கூறி இருந்தார். அவரது குடும்பம் அவரது ரகசியம் மற்றும் விசித்திரமான நடத்தையால் அவருக்கு மனநல பிரச்சினைகள் இருக்கலாம் என எண்ணினர்.

கொரோனா ஊரடங்கால் ரஹ்மான் வேலைக்கு செல்ல முடியவில்லை. இதன் விளைவாக, அவர் வீட்டுக்கு பணம் கொடுக்க முடியவில்லை, இது 2021 மார்ச்சில் அவரை விட்டு வெளியேற வழிவகுத்தது. மார்ச் மாதத்தில், அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி, பாலக்காட்டில் உள்ள விதானசேரி கிராமத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வந்து உள்ளனர்.

இந்த நிலையில் ரஹ்மான் குடும்பத்தினர் ரஹ்மானை காணவில்லை என போலீசில் புகார் அளித்தனர். ஆனால் ஜூன் 8 ஆம் தேதி, ரஹ்மானின் சகோதரர் அவரை நென்மாரா அருகே பார்த்து உள்ளார். உடனடியாக போலீஸ் உதவியுடன் ரஹ்மானை சந்தித்து உள்ளார். அப்போதுதான் இந்த ஜோடியின் அதிர்ச்சி கதை வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.

போலீசார் இரண்டுபேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் அவர்கள் ஒன்றாக வாழ முடிவு செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்து அந்த பெண் அந்த ஆணுடன் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து ரஹ்மான் கூறியதாவது:-

10 ஆண்டுகளுக்கு முன் "ஒரு நாள் சாஜிதா என்னிடம் வந்தார். அவரால் இனிமேல் தன் வீட்டில் தங்க முடியாது என கூறினார். எனக்கு வேறு வழியில்லை, அதனால் நான் என்னுடன் வரும்படி அவரிடம் கூறினேன். யாருக்கும் தெரியாமல் என் வீட்டில் அடைக்கலம் தந்தேன். நான் கொஞ்சம் பணம் சேமித்து சாஜிதாவுடன் வேறு எங்காவது சென்று வாழ வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் பணம் கிடைக்கவில்லை.

அதனால் அவரை 10 ஆண்டுகள் பாதுகாக வேண்டி இருந்தது என கூறினார்

சாஜிதா கூறியதாவது:-

அவர் தனக்கு கிடைத்த உணவில் பாதியை எனக்குக் கொடுத்தார். அவர் என்னை நன்றாக கவனித்துக்கொண்டார். ஆனால் ஒரு அறையில் தங்குவது கடினம். பகலில் நான் ஹெட்செட் பயன்படுத்தி டிவி பார்த்து அறையில் சுற்றிக்கொண்டிருந்தேன்.யாரும் இல்லாதபோது, நான் சில நேரங்களில் அறையிலிருந்து வெளியே வருவேன். இரவில், நான் வெளியே சென்று வந்து கொண்டிருந்தேன், ஆனால் பகல் நேரத்தில் நடமாட மாட்டேன். தலைவலிகளைத் தவிர நான் நோய்வாய்ப்படவில்லை.இனி மறைக்க வேண்டிய அவசியமில்லை என கூறினர்.

இந்த விசித்திரமான கதையைப் பற்றி பதிலளிக்கப்படாத பல கேள்விகள் இருந்தாலும், இவ்வளவு சிறிய வீட்டில் சஜிதா இருப்பதை குடும்பம் எப்படி அறிந்திருக்கவில்லை என்பதிலிருந்து தொடங்கி, ரஹ்மானும் சஜிதாவும் ஏன் வெளிப்படையாக வாழ இவ்வளவு நேரம் காத்திருந்தார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com