2023-ம் ஆண்டுக்கான தூய்மை நகரங்கள் பட்டியல் வெளியீடு - முதலிடம் பெற்ற நகரம் எது?


2023-ம் ஆண்டுக்கான தூய்மை நகரங்கள் பட்டியல் வெளியீடு - முதலிடம் பெற்ற நகரம் எது?
x

2023-ம் ஆண்டுக்கான நாட்டின் தூய்மையான நகரங்கள் பட்டியலை மத்திய அரசு இன்று வெளியிட்டது.

புதுடெல்லி,

தூய்மையில் சிறப்பாக செயல்படும் நகரங்களை கண்டறிந்து கவுரவப்படுத்தி ஊக்குவிக்கும் வகையில், ஸ்வஸ் சர்வேக்ஷான் என்ற தூய்மையான நகரங்களுக்கான விருது வழங்கும் திட்டத்தை 2016-ல் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்து வைத்தார்.

அதன்படி பல்வேறு பிரிவுகளின் கீழ் நாட்டில் தூய்மையில் சிறந்து விளங்கும் நகரங்கள் குறித்த தரவரிசை பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2023-ம் ஆண்டுக்கான நாட்டின் தூய்மையான நகரங்கள் பட்டியலை மத்திய அரசு இன்று வெளியிட்டது.

இந்த பட்டியலில் இந்தூர் மற்றும் சூரத் ஆகிய இரு நகரங்கள் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்தூர் தொடர்ந்து 7-வது முறையாக முதல் இடத்தை தக்கவைத்துள்ளது. நவி மும்பை மூன்றாவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டது.

ஒட்டுமொத்தமாக 'ஸ்வஸ் சர்வேக்ஷான்' திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்படும் மாநிலங்கள் பட்டியலில் மராட்டியம் முதல் இடத்தையும், மத்திய பிரதேசம் 2-வது இடத்தையும், சத்தீஸ்கர் 3-வது இடத்தையும் பிடித்துள்ளது.

முதல் இடம் பிடித்துள்ள நகரங்களுக்கு வெற்றிக்கான விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு, அம்மாநிலங்களை சேர்ந்த அரசு அதிகாரிகளிடம் வழங்கினார்.


Next Story