இந்தியாவில் மேலும் 3,038 பேருக்கு கொரோனா


இந்தியாவில் மேலும் 3,038 பேருக்கு கொரோனா
x

இந்தியாவில் மேலும் 3,038 பேருக்கு தொற்று உறுதியானது.

புதுடெல்லி,

இந்தியாவில் நேற்று 3,641 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று 3,038 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 20,129-ல் இருந்து 21,179 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 4,47,26,246 லிருந்து 4,47,29,284 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 2,609 பேர் குணமடைந்த நிலையில் 9 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 901 ஆக அதிகரித்தது.

தூத்துக்குடியில் நுரையீரல் புற்றுநோய், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நோயாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொரோனா பாதித்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 54 வயதான நபர் உயிரிழந்தார்.


Related Tags :
Next Story