இந்தியாவில் மீண்டும் 20 ஆயிரத்தைத் தாண்டிய கொரோனா பாதிப்பு


இந்தியாவில் மீண்டும் 20 ஆயிரத்தைத் தாண்டிய கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 20 July 2022 4:42 AM GMT (Updated: 20 July 2022 5:33 AM GMT)

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,557 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் தொடர்ந்து 4 நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வந்த நிலை நேற்று முன்தினம் மாறி, 16 ஆயிரத்து 935 பேருக்கு தொற்று ஏற்பட்டது. நேற்று தொடர்ந்து 2-வது நாளாக பாதிப்பு குறைந்தது. ஒரு நாளில் 15 ஆயிரத்து 528 பேருக்கு தொற்று ஏற்பட்டது.

இந்நிலையில் இந்தியாவில் புதிய கொரோனா பாதிப்பு நேற்றைவிட 32.3% அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20 ஆயிரத்து 557 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,38,03,889 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,25,825 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 18,517 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,31,32,140 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 1,45,654 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 2,00,61,24,684 பேருக்கு (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 26,04,797 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 4,98,034 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 87,06,53,486 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.


Next Story