5 ஆண்டுகளில் 657 ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை - மத்திய அரசு அதிர்ச்சி தகவல்


5 ஆண்டுகளில் 657 ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை - மத்திய அரசு அதிர்ச்சி தகவல்
x

5 ஆண்டுகளில் 657 ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை செய்திருப்பதாக மத்திய அரசு அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

துணை ராணுவ பிரிவுகளான சி.ஆர்.பி.எப், பி.எஸ்.எப், சி.ஐ.எஸ்.எப். ஐ.டி.பீ.பி., எஸ்.எஸ்.பி., அசாம் ரைபிள் மற்றும் என்.எஸ்.ஜி. ஆகியவை மத்திய ஆயுதப் படைகளின் அங்கமாகும். இவற்றில் சுமார் 10 லட்சம் வீரர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

இந்த படைப்பிரிவுகளில் கடந்த 5 ஆண்டுகளில் 657 வீரர்கள் தற்கொலை செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய மந்திரி நித்யானந்த் ராய் மாநிலங்களவையில் நேற்று இந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.

அதில், கடந்த 2021-ம் ஆண்டில் 153 வீரர்களும், 2020-ல் 149 வீரர்களும், 2019-ல் 133 வீரர்களும், 2018-ல் 97 வீரர்களும், 2017-ல் 125 வீரர்களும் தற்கொலை செய்ததாக குறிப்பிட்டு உள்ளார்.

1 More update

Next Story