இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 140- பேருக்கு கொரோனா


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 140- பேருக்கு கொரோனா
x

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 140- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 140- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 1,960- ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 81 ஆயிரத்து 921 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக மேகாலயாவில் ஒருவரும் குஜராத்தில் இரண்டு பேரும் உயிரிழந்துள்ளனர். நாட்டில் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 5,30,733- ஆக உயர்ந்துள்ளது. தினசரி கொரொனா பாதிப்பு விகிதம் 0.10 சதவிகிதம் ஆகவும் வாராந்திர பாதிப்பு விகிதம் 0.08 சதவிகிதமாகவும் உள்ளது.


Next Story