தாவரேகொப்பா உயிரியல் பூங்காவில் 11 வயது ஆண் சிங்கம் செத்தது


தாவரேகொப்பா உயிரியல் பூங்காவில்   11 வயது ஆண் சிங்கம் செத்தது
x

தாவரேகொப்பா உயிரியல் பூங்காவில் 11 வயது ஆண் சிங்கம் செத்தது

சிவமொக்கா: சிவமொக்கா மாவட்டத்தில் தாவரேகொப்பா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு புலி, சிங்கம் உள்ளிட்ட வனவிலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பூங்காவில் உள்ள எஸ்வாந்த் என்ற ஆண் சிங்கம் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தது.

கால்நடை டாக்டர்கள் அதற்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் அந்த சிங்கம் நேற்று செத்துவிட்டது. அதன் உடலை பரிசோதித்த டாக்டர் ரத்த குறைபாட்டில் சிங்கம் செத்ததாக கூறினார். இதையடுத்து உயிரியல் பூங்காவில் சிங்கத்தின் எண்ணிக்கை 4 ஆக குறைந்தது.


Next Story