மேற்குவங்காளத்தில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவு

மேற்குவங்காளத்தில் இன்று காலை 10.51 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கொல்கத்தா,
மேற்குவங்காள மாநிலம் அலிபூர்தரில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 10.51 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவானதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அலிபூர்தரில் 14 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தபோதும் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





